சனி, 29 டிசம்பர், 2018
புதன், 12 செப்டம்பர், 2018
வியாழன், 17 மே, 2018
Focus on the three Hs, advises Swami Vivekananda.
http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-history-and-culture/focus-on-the-three-hs/article4294280.ece
http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-history-and-culture/focus-on-the-three-hs/article4294280.ece
சனி, 21 ஏப்ரல், 2018
Bhagavan's multi linguistic talent
பன்மொழியறிவு ( 29 – 10 – 1947 )
*************************
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நான் ஆச்ரமம் சென்றபொழுது பகவான் ஒரு மலையாளப் புத்தகம் படித்துக் கொண்டே அருகிலிருந்த ஒரு பக்தரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
*************************
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நான் ஆச்ரமம் சென்றபொழுது பகவான் ஒரு மலையாளப் புத்தகம் படித்துக் கொண்டே அருகிலிருந்த ஒரு பக்தரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
‘ சிறு வயதிலேயே பகவான் மலையாளம் படிக்கக் கற்றுக் கொண்டீர்களா ? ’ என்று கேட்டார் அந்த பக்தர்.
“ ஊஹீம் , நான் குருமூர்த்தத்திலிருந்தபோது பழனி சுவாமி என்னுடன் , இருந்தானில்லையா ? அவன் மலையாள ‘ அத்யாத்ம ராமாயண ’ த்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அதைப் பிரிப்பதும் படிப்பதுமாக இருப்பான். படிக்கத் தெரிந்த ஒவ்வொரு மலையாளியும் அந்தக் கிரந்தத்தைத் தவறாமல் படிப்பான். அதனால் பழனிசுவாமிக்கு சரிவரப் படிக்க வராவிட்டாலும் தப்புத்தப்பாகவே ஒரு வழியாகப் படிப்பான். நான் அப்பொழுது மௌனத்தில் இருந்ததால் பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பேன். மாந்தோப்புக்கு இடம் மாறியபின் ஒருநாள் நான் அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தால் எல்லாம் கிரந்தாக்ஷரம் போலவே இருந்தது. எனக்கு முன்னதாகவே கிரந்த லிபி தெரிந்திருந்தபடியால் மலையாளம் சுலபமாகவே எழுதுவதற்கும் படிப்பதற்கும் கற்றுக் கொண்டேன் , ” என்றார் பகவான்.
‘ தெலுங்கு படிக்க எப்பொழுது கற்றுக் கொண்டீர்கள் ’ என்று இன்னொருவர் கேட்டார். “ விருபாக்ஷ குகையிலிருக்கும் போது கம்பீரம் சேஷய்யர் ஏதாவது சுலோகங்களைத் தெலுங்கில் எழுதிக் கொடுக்கச் சொன்னால் புத்தகத்தில் எழுத்துக்கெழுத்து பார்த்துப் பார்த்து எழுதிக் கொடுப்பேன். அப்படியே படிப்படியாகப் பழக்கமாகிவிட்டது. 1900 – ம் வருஷத்திலேயே படிக்க எழுத வந்து விட்டது ” என்றார் பகவான்.
‘ தேவநகரி லிபி கற்றுக் கொண்டது எப்பொழுது ? ’ என்று நான் கேட்டேன். “ அதுவும் அந்தக் காலக்கட்டத்தில்தான். முத்து , யக்ஞராம தீக்ஷிதர் முதலியவர்க ளெல்லோரும் அப்போது வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் தேவநகரி லிபியில் புத்தகங்க ளிருந்தன. அவைகளைப் பார்த்துப் பார்த்து எழுதுவேன். அப்படியே பழக்கமாகிவிட்டது ” என்றார் பகவான். ‘ நாயனா ( கணபதி முனி ) வந்தபிறகு கற்றுக் கொண்டதாக கேள்விப்பட்டோமே ? ’ என்றார் மற்றொருவர்.
“ ஊஹீம். இல்லை , அவர் வந்தபின் தெலுங்கு சரளமாகப் பேச வந்தது. அவ்வளவுதான் ” என்றார் பகவான்.
‘ தெலுங்கு சிறுவயதிலேயே கற்றுக் கொண்டதாகக் கேள்விப்பட்டோமே ’ என்றார் மற்றொருவர். “ அப்பொழுது எழுதப் படிக்க வராது. எங்கள் சின்ன தாத்தாவிற்குத் தெலுங்கு தெரியும். அவர் என்னைப் பக்கத்தில் படுக்கையில் வைத்துக் கொண்டு ‘ க கு தீர்க்கமிஸ்தே கா ’ ( ‘ க ’ வை நீட்டினால் ‘ கா ’ ) என்று சொல்லிக் கொடுப்பார். அவ்வளவுதான். பிறகு சுலோகங்களை எழுதிக் கொடுத்தே எழுதக் கற்றுக் கொண்டேன். ‘ உபதேச சாரம் ’ எழுதியபோது ராமயோகி ( யோகி ராமய்யா ) தெலுங்கிலும் எழுத வேணுமென்றதால் தமிழ்ச் சந்தத்தையொட்டி சில ஈரடிச் செய்யுள்களெழுதி நாயனாவுக்குக் காட்டினேன். அவர் ‘ ஐயோ , இது தெலுங்கு த்விபதமில்லையே ? இது தமிழ் சம்பிரதாயம்தான் ’ என்று சொல்லி தெலுங்கு த்விபதச் சந்தத்தின் கணங்களைச் ( சந்த அமைப்பு முறைகளை ) சொன்னார். அந்தக் கணங்களை யொட்டி தமிழில் ஒரு சின்ன சூத்ரமெழுதி வைத்துக் கொண்டேன். அதை யனுசரித்துக் கொஞ்சம் மாற்றி யெழுதினால் தெலுங்கு த்விபதம் வந்துவிட்டது. அதை நாயனாவுக்குக் காட்டினேன். ‘ ஆ ! இப்போ சரியாக இருக்கு ’ என்று சொல்லி அதில் திருத்த மேதும் செய்யாமல் , ‘ இப்படியே அச்சுப் போட்டு விடலாம் ’ என்றார். அதன் பின் பலராம ரெட்டி ‘ சுலக்ஷணசாரம் ’ ( தெலுங்கு ‘ சந்தோலக்ஷணம் ’ நூல் ) கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பார்த்து மீதியுள்ள விருத்தங்களின் லக்ஷணங்கள் எல்லாம் சுருக்கமாக இரண்டு பக்கங்களி லெழுதி ‘ பெத்த பால சிக்ஷை ’ ( சிறுவர் தெலுங்குப் பாடநூல் ) யில் ஒட்டி வைத்துக் கொண்டேன். என் தேவைக்கு அதுவே போதுமானதாகி விட்டது. இப்போது யாரேனும் பத்யம் படித்தால் , இது எந்த வகையான பத்யம் , தப்பு எங்கே என்று சுலபமாகக் கண்டுபிடிக்க முடிகிறது. ஒவ்வொரு பாஷையும் இதுபோலவே பழக்கமாயிற்று. வேணுமென்று எந்த பாஷையும் கற்றுக் கொள்ளவில்லை ” என்று கூறி முடித்தார்.
ஸ்ரீ ரமணாஸ்ரமத்திலிருந்து கடிதங்கள் – 2 லிருந்து ஒரு பகுதி.
திங்கள், 2 ஏப்ரல், 2018
வள்ளலார் போற்றும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி
காராய வண்ண மணிவண்ண
கண்ண
கனசங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய
நேய ஸ்ரீராம ராம
வெனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு
சூழ்க தாமோத ராய
நமவோம்
நாராய ணாய நமவாம
னாய நமகேச வாய
நமவே.
உரை:
கார்மேகத்தையும் நீலமணியையும் போன்ற நிறத்தையுடைய கண்ணனே,
பெருமையுடைய சங்கு சக்கரங்களை ஏந்துபவனே,
சீர்மையையுடைய தூய மலர் நிகரும்
வாயையுடையவனே, அன்பனே, சீராமராம என்று
பரவுவதே ஒழுங்குடைய வாழ்வை யளிக்குமாதலால், ஓம்
தாமோதராய நம, நாராயணாய நம,
வாமனாய நம, கேசவாய நம
என்று, நெஞ்சே நீ நினைப்பாயாக.
எ.று.
காராய வண்ணம் - கார்
மேகத்தைப் போன்ற நிறம். கார்
வண்ணம் மேனி நிறத்திற்கும், மணிவண்ணம்
மேனி யொளிக்கும் உவமம். மணி - நீலமணி.
கண்ணன் - கரியவன். கருங்கதிர் விரிக்கும் திருமேனியுடைய கண்ணன் என்பதாயிற்று. கனம்
- பெருமை. ஒரு கையிற் சங்கும்
ஒரு கையிற் சக்கரமும் ஏந்துதலால்
“சங்கு சக்கரதரன்” என்று உரைக்கிறார். இவ்விரண்டையும்
பெரியாழ்வார், “வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு, படையோர் புக்கு முழங்கும்
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு” (1 : 1) எனச் சிறப்பிப்பர். பாஞ்ச
சன்னியம், கண்ணன் ஏந்தும் சங்குக்குப்
பெயர். இதழ் ஒடியாமல் சீர்மையுடன்
விரிந்த செந்தாமரை மலர் போன்ற வாய்
என்றற்குச் “சீராய தூய வாய்”
என்று குறிக்கின்றார். நேயம் - அன்பு. துயர்
செய்த அரக்கரிடத்தும் அன்பு செய்தது பற்றி,
“நேய சீராம” எனப் பராவுகின்றார்.
உலகியலிற் பற்பல பொருள்களை நினைந்து
அலமருதலை விடுத்துச், சீராமராம என நினைக்கின், தாராய
வாழ்வை அந்நினைவு தரும் என்றற்குச் “சீராம
ராம எனவே தாராய வாழ்வு
தரும்” என்று இயைக்க. அறநெறிப்பட்ட
ஒழுங்கமைந்த வாழ்வைத் “தாராய வாழ்வு” என்கின்றார்.
தார் - ஒழுங்கு. நெஞ்சே எனற்பாலது, நெஞ்சு
என வந்தது அண்மை விளி.
சூழ்தல், நினைத்தல். தாமோதரனே, நாராயணனே, வாமனனே, கேசவனே உனக்கு
வணக்கம். சீராமராம என்பதோடு ஓம் தாமோதராய நம,
ஓம் நாராயணாய நம, ஓம் வாமனாய
நம, ஓம் கேசவாய நம
என்று கூறியது, நெஞ்சுக்கு நினைக்கும் நெறி காட்டியவாறு. ஓம்
தாமோதராய நம என்பது முதலாக
வருவன வடமொழியால் வழிபடும் திறம்.
இதனால் சீராம நாமத்தை
நினைந்து ஓதும் முறையும், ஓதிய
வழி எய்தும் பயனும் தெரிவித்தவாறாம்.
திங்கள், 12 பிப்ரவரி, 2018
Sri Seshadri Swamigal revealed to the world the glory of Bhagavan Ramana Maharshi.
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/saint-who-revealed-sri-ramana/article22628619.ece
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பகவான் ரமணர் தன் கைப்பட வரைந்த திரு அருணை மலை. அருணாச்சல சிவ .அருணாச்சல சிவ . அருணாச்சல சிவ . அருணாச்சலா

-
சமாதியும் சரீரமும் (28-4-22 பகவான் ரமணரின் ஆராதனை தினம் ) தியானத்தில் சமாதி நிலை என்றால் என்ன என்பதை பகவான் இந்தக் கலி காலத்திலேயே ...
-
https://mahaperiyavaa.blog/2024/02/02/ithanai-yamatrai-mahaperiyava-karavalambam-in-sri-pradosham-mamas-voice/