வெள்ளி, 16 மே, 2014

பக்தி தவழும் பவளக்குன்று:


பவளக்குன்று: திருவண்ணாமலை செல்லும் போது, அண்ணாமலையார் ஆலயம், ரமணாஷ்ரமம் ஆகியவற்றோடு மறக்காமல் அருகில் உள்ள பவளக்குன்றுக்கும் சென்று வாருங்கள். ஐந்து நிமிடத்தில் படியேறி விடலாம்
பகவான் ரமணர் தன் முதல் உபதேசத்தை (`அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின் மௌனமாய் இருக்கை நன்று.'அன்னை அழகம்மைக்கு1899 ல் அருளிய புண்ணிய இடம் இது. குன்றின் மேல் அழகிய ஆலயம் இருக்கிறது. பார்வதி தேவி, இந்தக் குன்றில் தான் தவம் இருந்து அருணாசலேசுவருடன் ஐக்கியமானார். கௌதம முனிவர் தவம் செய்ததும் இந்தக் குன்றில் தான்

சிவபெருமான், முத்தாம்பிகை, கணபதி, வள்ளி, தேவசேனாவுடன் முருகன், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோருக்கு இங்கே சன்னதி இருக்கிறது. ஆலய நேரம் காலை 7.30-9, மாலை 5.30-6.30. 


ஆலயம் திறக்காத நேரத்தில் நீங்கள் சென்றால் கூட , அமைதி தவழும் பிராகாரத்தில் மரத்தடியில் சும்மா கண்களை மூடி, ரமணர், தான் தாய்க்கு உபதேசம் செய்த இடம் இது தான், பகவானின் முதல் உபதேசம் நடந்தது இங்கே தான் என்பதை நினைத்துப் பாருங்கள். ஆனந்தம் அடைவீர்கள்


நன்றி: குமுதத்தின் மாண்புமிகு மகான்கள்.  
படம்: நன்றி http://arunachalagrace.blogspot.in


செவ்வாய், 13 மே, 2014


Pleasure and Pain are merely two mental modes - Bhagavan 


Sri Bhagavan :   There were two young friends in a village in South India. They were learned and wanted to earn something with which they might afford relief to their respective families.  They took leave of their parents and went to Benares (Varanasi) on a pilgrimage.  On the way, one of them died. The other was left alone. He wandered for a time, and in the course of a few months he made a good name and earned some money.  He wanted to earn more, before he returned to his home.  In the meantime, he met a pilgrim who was going South and would pass through the native village of the young pundit. He requested the new acquaintance to tell his parents that he would return after a few months with some funds; and also, that his companion had died on the way. The man came to the village and found the parents. He gave them the news, but changed the names of the two men.  Consequently, the parents of the living man bemoaned his supposed loss and the parents of the dead man, were happy expecting the return of their son, bringing rich funds as well.
   You see therefore that 'pleasure' and 'pain' have no relation to the actualities but are mere mental modes.

பகவான் சொன்ன கதை. வெளியூர் போன இரண்டு நண்பர்களில் ஒருவன் வழியில் இறக்கிறான். இன்னொருவன் பிரச்னைகளைச் சமாளித்து பணக்காரன் ஆகிறான். ஆனால் இந்தச் செய்தியை ஊருக்குக் கொண்டு செல்லும் ஆசாமி இறந்தவன் பணக்காரனாகப் பரிமளிக்கிறான் என்றும் அடுத்தவன் இறந்துவிட்டான் என்றும் மாற்றிச் சொல்கிறான். இந்தச் செய்தி எப்படிப் பொய்யோ அது போல உண்மைச் செய்தியும் பொய்யே. காரணம் வாழ்வு, சாவு, பணம், பதவி எல்லாமும் வெறும் செய்திகளே. செய்திகளுக்கு அப்பால் உள்ளதே நம் உண்மை இருப்பு.  

சனி, 10 மே, 2014


அர்த்தமுள்ள இந்து மதம் நூலிலிருந்து…..
ஆந்திராவில் ஒரு கோவில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப்படவில்லை. அங்கே போய்க் காஞ்சிப் பெரியவர் ஓரிரவு தங்கினாராம். ‘தெய்வம் பிரதிஷ்டையாகி விட்டது என்று ஆந்திர மக்களெல்லாம் சந்தோஷப்பட்டார்களாம்.
இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால், ‘இந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.
அந்த ஞானப் பழத்தை தரிசித்த போது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க இயலாது.
தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது, அவரைப் பற்றிப் பாட வேண்டும்.
பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும்.
புத்தன் சொன்னதை விட அவர் நமக்கு அதிகமாகச் சொல்லி இருக்கிறார்.
ஏசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்திருக்கிறார்.
பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்தவர் அவர் ஒருவரே.
அந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள்.
அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்.

செவ்வாய், 6 மே, 2014

பெற்றதைப் பாடினார்கள்

பகவான் ஸ்ரீ ரமணரிடம் ஒரு வீணை வித்வாம்சினி ஒரு முறை `தியாகராஜ சுவாமிகளும் மற்ற சங்கீதப் பெரியோர்களும் பாடித்தானே மோக்ஷம் பெற்றார்கள். அவர்களைப்போல் நானும் இசையின் மூலம் மோக்ஷம் பெற இயலுமா?' என்று வினவினார்.


அதற்கு பகவான் `தியாகராஜரும் மற்றவர்களும் பாடிப் பெறவில்லை. பெற்றதைப் பாடினார்கள். அதனால் தான் அவர்களின் கீர்த்தனைகள் இன்னும் உயிருள்ளதாக இருக்கின்றன' என்றார். 

Pradosha mama's voice, courtesy sage of kanchi site

https://mahaperiyavaa.blog/2024/02/02/ithanai-yamatrai-mahaperiyava-karavalambam-in-sri-pradosham-mamas-voice/