வெள்ளி, 11 நவம்பர், 2016

வியாஸர் பதினெட்டு புராணங்களையும் பண்ணி முடித்தபின் சிஷ்யர்கள் அவற்றின் ஸாராம்சத்தை ஒன்றிரண்டு ச்லோகங்களில், ஸுலபமாக நினைவில் வைத்துக் கொள்ளும்படியாகச் சுருக்கித் தரும்படிப் பிரார்த்தித்தார்களாம். உடனே அவர் “ஒன்றிரண்டு ச்லோகம் எதற்கு? இந்தப் பதினெட்டுப் புராணம் மட்டுமின்றி மொத்தமிருக்கிற கோடிப் புஸ்தகங்களின் ஸாரத்தையும் அரை ச்லோகத்திலேயே சொல்கிறேன்”, “ச்லோகார்தேந ப்ரவக்ஷ்யாமி யதுக்தம் க்ரந்தகோடிஷு |” என்று ஒரு ச்லோகத்தின் முதல் பாதியாகச் சொல்லிவிட்டு மற்ற பாதியில் அந்த ஸாரமான தத்துவத்தைச் சொன்னாராம்:
”பரோபகார: புண்யாய பாபாய பரபீடநம் ||”
இருக்கிற அத்தனை கோடி மத சாஸ்திர புஸ்தகங்களுக்கும் உயிர் நிலையான தத்வம் என்னவென்றால், “புண்யம் ஸம்பாதிக்க வேண்டுமானால் பரோபகாரம் பண்ணு; பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதனால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு” என்பதுதான் – என்று இதற்கு அர்த்தம்.
பாபம் எது என்று தெரிந்து கொண்டு அதை விலக்குவதற்கும், புண்யம் எது என்று தெரிந்து கொண்டு அதைப் பண்ணுவதற்குந்தான் மதம் என்பதே இருக்கிறது. இங்கே நம் மதத்துக்கு முக்யமான மூல புருஷர்களில் முதன்மையாயிருக்கிற வ்யாஸாசார்யாள் பர உபகாரம் தான் புண்யம், பர அபகாரம்தான் பாபம் என்று சொல்கிறாரென்றால், அதற்கப்புறம் நம் மதத்தில் பரோபகாரத்துக்கு இடமுண்டா என்ற வாதத்துக்கே இடமில்லை. – ஜகத்குருஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

செவ்வாய், 18 அக்டோபர், 2016

“ ஒரு ஞானி பக்தர்களைக் காப்பாற்றுவான் . ஆனால் சங்கலபத்தாலே இல்லை. அவனது சந்நிதி விசேஷத்தாலே ”

Courtesy Sri ramana mandiram
சந்நிதி மகிமை
ஒரு நாள் பக்தர் ஒருவர் மிகுந்த மன வேதனையுடன் பகவானிடம் ஒரு சந்தேகம் கேட்டார். “ பகவான் நீங்க நினைச்சா பக்தர்களுடைய தலையெழுத்தை மாற்ற முடியுமா ? ”
பகவான் சிரித்தார் . ஞானிக்கு ஏது சங்கல்பம் ? ஒரு ஜீவன் முக்தனுக்கு சங்கல்பம் இருக்கவே முடியாது , அது சாத்தியமில்லை , ” என்றார்.
அப்போ எங்க கதிதான் என்ன ? எங்க கஷ்டங்களைப் போக்க உங்க கிட்டதானே வேண்டுகிறோம். அதற்கு பலனில்லையா என்றார் ஒரு பக்தர்.
கருணை தோய்ந்த குரலில் , “ ஒரு ஞானியின் சந்நிதியில் அமர்ந்தால் ஒருவரது பாவச்சுமை கணிசமாகக் குறையும். ஞானிக்கு சங்கல்பம் இல்லை. இருந்தாலும் அவனது சந்நிதி ரொம்ப சக்தி வாய்ந்தது. ஞானி பேசாம இருப்பான். அவன் சந்நிதி , தலையெழுத்தை மாற்றும் , காப்பாற்றும் , சாந்தி தரும். பக்குவமானவனுக்கு ஆன்மானுபவம் தரும். எல்லாம் தானா நடக்கும். அவனுக்கும் அதுக்கும் எந்த சமபந்தமும் இருக்காது , ” என்று பேசினார் பகவான்.
“ ஒரு ஞானி பக்தர்களைக் காப்பாற்றுவான் . ஆனால் சங்கலபத்தாலே இல்லை. அவனது சந்நிதி விசேஷத்தாலே ” என்றார் மகரிஷி

சனி, 15 அக்டோபர், 2016

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

ஊமைகளைப் பேசவைக்கும் பிருந்தாவனம், முடவர்களை நடக்க வைக்கும்  பிருந்தாவனம் - பெரியவா


http://mahaperiyavapuranam.org/mookam-karoti-vaachalam/
மஹாஸ்வாமிகளின்  அறிவுரை 

தாம்யத, தத்த, தயத்வம் :  அடங்குங்கள், தானம் செய்யுங்கள், எல்லோரையும் நேசியுங்கள்


https://mahaperiyavaa.wordpress.com/2016/09/17/maithreem-bhajatha-a-heart-melting-rendition/


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

Sathyam Advaitam.
Read about the greatness of mouna guru swamigal. Visit his samadhi near Kumbeshwarar temple, Kumbakonam when you can.


http://vandeguruparamparaam.blogspot.com/2016/08/mahaperiyava-did-dhanda-namaskaram-to.html


Mahaperiyava says: 
Adwaitham & Atomic Science
காண்கிற உலகம் பலவிதமாக இருந்தாலும், ஒன்றேதான் இத்தனையும் ஆகியிருக்கிறது என்பதை நவீன ஸயன்ஸ் தெளிவாக ஒப்புக் கொண்டு நிலை நாட்டுகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு மூலப்பொருள்களுக்குள் (Elements) அடங்குவதாக ஸயன்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப்பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால், இப்போது அணு (Atom) பற்றி அறிவு விருத்தியான பின் இந்த மூலப்பொருள்கள் எல்லாமும்கூட வேறு வேறான பொருள்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (Energy) தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் ஸயன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியிருக்கிறார்கள். பொருள் (Matter) சக்தி (Energy) – இவையும் வேறானவை அல்ல என்று நவீன ஸயன்ஸ் சொல்லுகிறது. ஆக, அத்வைதம்தான் ஸயன்ஸும் நமக்குக் காட்டுகிற உண்மை. ஐன்ஸ்டைன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல ஸயன்ஸ் நிபுணர்கள் உபநிஷதமும் சங்கர பகவத் பாதாளும் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்துக்கு மிகவும் நெருங்கி வந்து விட்டார்கள்.
உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில், ‘உலகம் இறுதி சத்தியமல்ல! இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம்; இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றைச் சார்ந்ததே’ என்பதுதான்; இதையே மேற்சொன்ன ஸயன்ஸ் நிபுணர்களும் சொல்கிறார்கள். பிரம்மமே பாரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத்தான் இவர்கள் “உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (“relative”) தான்; முழு உண்மை (“absolute”) அல்ல” என்கிறார்கள்.
சக்தியும் பொருளும் ஒன்று என்ற பெரிய உண்மையைக் கண்ட அணு விஞ்ஞானிகள் அந்த அறிவைக் கொண்டே அணுகுண்டைக் கண்டுபிடித்தார்கள் என்பதுதான் துக்கமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து ஸயன்ஸால் நிலைநாட்டப்படும் அத்வைதம் புத்தி மட்டத்தோடு நின்றதன் அனர்த்தம் இது. ஸயன்ஸின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடும் மட்டும் நிற்காமல் வெளி உலகத்துக்கு காரணமான உள் உலக உண்மையையும் ஆராய்ந்து, புத்தியோடு நிற்காமல், மக்களின் பாவனையிலும் தோய வேண்டும். ஜீவ குலம் எல்லாம் ஒன்றுதான் என்ற ஞானமும் ஸயன்ஸ் வழியாக ஏற்பட்டால், அணுகுண்டைத் தயாரித்த நவீன ஸயன்ஸே ஆத்ம ஹானிக்குப் பதிலாக மகத்தான ஆத்ம க்ஷேமம் செய்ததாகவும் ஏற்படும்.